இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது..!!

Read Time:1 Minute, 54 Second

201703231856249338_kidnapped-young-girl-molestation-arrested-auto-driver_SECVPFஆம்பூர் அருகே உள்ள பெய்யாங்குப்பம் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் சாமுவேலு (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகவும் உள்ளார்.

இவரையும் அதே பகுதியை சேர்ந்த ராணியையும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 14-ந் தேதி முதல் காணவில்லை. திருமண ஆசை வார்த்தை கூறி தங்கள் மகளை சாமுவேலு கடத்தி சென்றதாக கடந்த 17-ந் தேதி ராணியின் பெற்றோர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

ராணிக்கு சாமுவேலு தாய்மாமன் என்று கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேலையும், ராணியையும் தேடி வந்தனர். இந்த நிலையில் 2 பேரையும் போலீசார் பிடித்தனர். ராணியை சாமுவேலு மைசூருக்கு அழைத்துச் சென்றிருந்ததாக தெரிகிறது.

விசாரணையில் ராணியை திருமண ஆசை வார்த்தை கூறி சாமுவேலு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சாமுவேலுவை கைது செய்தனர். வேலூர் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார். அவர் மீது இளம் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தத்துக்குப் பின்னரான வடக்கில், காணி இழப்பும் காணி இன்மையும்..!! (கட்டுரை)
Next post பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?: விஷாலை வறுத்தெடுத்த தாணு..!!