பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..!!
Read Time:58 Second
தேனி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் ஆண்டவர் மகள் கவிதா (வயது36). இவருக்கு லட்சுமிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த மாதம் பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இது குறித்து கவிதா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் தேனி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரமேஷ், கவிதாவிடம் சென்று போலீசில் ஏன்? புகார் செய்தாய்? என தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கவிதா வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தனர்.
Average Rating