இளம்பெண் மானபங்க வழக்கில் கேரள சினிமா கதாசிரியருக்கு ஜெயில்..!!

Read Time:2 Minute, 0 Second

arrest (5)கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகம்மது ஹாசிர் (வயது 30). இவர் ஏராளமான மலையாள சினிமா படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

ஒரு மலையாள சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவதற்காக இவருக்கு கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா தயாரிப்பாளர் வீடு எடுத்து கொடுத்திருந்தார்.

முகம்மது ஹாசிரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து சினிமா திரைக்கதை எழுதி வந்தார். அப்போது அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணுக்கும் முகம்மது ஹாசிருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் அந்த பெண் அடிக்கடி முகம்மது ஹாசீரின் அறைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தன்னை முகம்மது ஹாசிர் தனது அறையில் வைத்து மானபங்கம் செய்துவிட்டதாக அந்த பெண் கொச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகம்மது ஹாசிரை கைது செய்தனர். கடந்த 2016-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது.

மேலும் சினிமா கதாசிரியர் முகம்மது ஹாசிர் மீது எர்ணாகுளம் கோர்ட்டிலும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முகம்மது ஹாசிருக்கு 2 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்..!! (பதறவைக்கும் காணொளி)
Next post ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்..!! (கட்டுரை)