சவுதியில் பாலியல் அடிமையாக தவிக்கும் இந்திய பெண்: நெஞ்சை பிசையும் சம்பவம்..!!
சவுதி அரேபியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் இந்திய பெண் ஒருவர் கொடுமைக்காரர்களிடம் இருந்து மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் வீட்டு வேலை செய்து வந்த பெண் ஒருவர், வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் தப்பியோடி வந்துவிட்டதாகவும், அவர்களது கண்ணில் சிக்காமல் பாதுகாப்பாக இந்திய தூதரகத்திற்கு சென்றுவிட வேண்டும் எனவும் அப்பெண் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஹைதராபாத்தை நகரைச் சேர்ந்த அப்பெண், பணிபுரிந்து வந்த வீட்டின் உரிமையாளர் மஹா அயத் துர்கி அனாசி என்பவரது மகன், தாயின் கண்முன்னரே இளம்பெண்ணை வீட்டின் அறைக்குள் அழைத்துச் சென்று கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், சவுதியில் அழகு நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து, பின்னர் வீட்டு வேலைக்கு சேர்த்துவிட்டு ஏமாற்றியுள்ளார்.
முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து மும்பை அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் பின்னர் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ரியாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மோஹத் அமீர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு யூலை மாதம் முகவரின் வார்த்தையை நம்பி சவுதியில் சிக்கித் தவிக்கும் பெண் உதவியை நாடுவதாக எம்பிடி தலைவர் அம்ஜெத்துல்லா கான் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணை பத்திரமாக இந்தியா கொண்டு வர உதவுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து உரிய பதில் எதுவும் வரவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இது போன்று பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் மிகப் பெரிய ஆட்கடத்தல் சம்பவம் நிகழ்ந்து வருவதாக கான் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் மட்டுமல்லாது, ஹைதராபாத்தைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating