பெண்ணின் நுரையீரலுக்குள் 9 வருடங்களாக மறைந்திருந்த ஆபத்து..!!
பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் நுரையீரலில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்ரே
னுகா (19) என்ற அந்த இளம்பெண், மிகவும் துர்நாற்றம் வீசும் வகையில், தனக்கு அடிக்கடி சளித்தொல்லை, இருமல் ஏற்படுவதாகக் கூறி, பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி மார்பக நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், நுரையீரலில் பேனா ஒன்றின் பாகங்கள் சிதைந்த நிலையில் உள்ளதை கண்டுபிடித்தனர்.
நீண்ட நாட்களாக இந்த பேனா நுரையீரலில் தங்கியதால் உள்ளுறுப்புகள் மிகவும் சிதைந்துபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த பெண், சளித்தொல்லை, இருமலால் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக, சளி வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு சிறப்பான முறையில் நேர்த்தியாக, அறுவை சிகிச்சை செய்து, அதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்
Average Rating