இரத்தக் கண்ணீர் சிந்தும் கன்னி மரியாள் சிலை..!! (வீடியோ)
Read Time:1 Minute, 14 Second
ஆர்ஜென்டீனாவில் லொஸ் நரான்ஜொஸ் நகரில் வீடொன்றிலுள்ள கன்னி மரியாள் சிலையின் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாக தகவல் பரவியதையடுத்து அந்த சிலையை தரிசிக்க பெருமளவான கிறிஸ்தவர்கள் அந்நகருக்கு படையெடுத்த வண்ணமுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி மரியாள் சிலையின் கண்களிலிருந்து இரத்தம் என நம்பப்படும் சிவப்பு நிறமான திரவம் வடிய ஆரம்பித்ததையடுத்து அந்த சிலையிருந்த வீடு ஒரு வணக்க ஸ்தலமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிராந்திய திருச்சபையானது மேற்படி மரியாள் சிலை குருதிக் கண்ணீர் சிந்துவது உண்மையிலேயே அற்புதம் ஒன்று தானா என்பதைக் தொடர்பில் கண்டறிய ஆய்வை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating