ரசகுல்லாவுக்காக போர்க்களமாக மாறிய திருமண மண்டபம்: கடைசியில் நடந்தது என்ன?..!!
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு ரசகுல்லாவுக்காக திருமண வீடே போர்க்களமாக மாறியதோடு மட்டுமல்லாமல் திருமணமும் நின்றுபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் வீட்டின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில் ரசகுல்லா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ரசகுல்லாவின் அருகில் மணமகள் வீட்டின் சார்பில் நபர் ஒருவரை நிற்கவைக்கப்பட்டிருந்தார்.
ஒருவருக்கு ஒரு ரசகுல்லா கொடுத்தால் போதும் என பெண் வீட்டார் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகன் வீட்டினை சேர்ந்த நபர் 2 ரசகுல்லாவை எடுத்துள்ளார்.
இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ரசகுல்லாவுக்காக அந்த இடமே போர்க்களமாக மாறியது. இதனைத்தொடர்ந்து தங்கள் குடும்பத்தை அவமதித்துவிட்டார்கள் என மணமகள் இந்த திருமணத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் மணமகள் தரப்பில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Average Rating