பார்வதிபுரம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை..!!
Read Time:1 Minute, 14 Second
பார்வதிபுரத்தை அடுத்த சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது26). இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.இதனால் அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடைபெற வில்லை.
இந்த மனவருத்தத்தில் காணப்பட்டு வந்த நாகராஜன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் நாகராஜன் மீது எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating