கூட்டு பலாத்காரத்தின் உச்சகட்டம் – சொந்த தங்கையை கற்பழிக்க உதவி செய்த கொடூர அக்கா…!!

Read Time:2 Minute, 16 Second

728x410_9386_girl-350x197தங்கையை கற்பழிக்க உடன் பிறந்த அக்காவே உதவி செய்துள்ள கொடுமை குவாலியரில் அரங்கேறியுள்ளது.

கடந்த மார்ச் 31-ஆம் தேதி குவாலியரில் உள்ள மஹாராஜபுரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள சிறுமியை சிலர் உடல்ரீதியாக துன்புறுத்துவதாக சைல்ட் லைன் அமைப்பினரிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு வந்த சைல்ட் லைன் அமைப்பினர், கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட போது, கடந்த சில வாரங்களாக அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் அக்கா கணவர் உட்பட நால்வர் அந்த சிறுமியை தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த சிறுமியின் பெற்றோர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டனர். இதன் காரணமாக தனது அக்கா மற்றும் அக்கா கணவர் ஆகியோரின் பராமரிப்பில் அந்த சிறுமி வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அக்கா கணவரும், அவரது நண்பர்கள் மூவரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இதற்கு சிறுமியின் அக்காவும் உடந்தையாக இருந்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த சிறுமியின் அக்கா, அக்கா கணவர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் இருவரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெயிலின் தாக்கத்தால் வாடிய சருமத்தை மீண்டும் ஜொலிக்கச் செய்ய இதோ சூப்பர் குறிப்புகள்..!!
Next post 25 ஆண்டுகளாக இலைகளை சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய மனிதர்…!! (வீடியோ)