நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை..!!
மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் பர்வதி. இவர் மரியான், பெங்களூர் நாட்கள், உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்தவர்.
இவர் சமீபத்தில் வெளிவந்த டேக்ஆப் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது 30-35 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கிவந்த அவர் தற்போது அதை 1 கோடியாக உயர்த்திவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தது.
ஹீரோக்களுடன் ஒப்பிடும்போது நடிகைகளின் சம்பளம் குறைவாக இருப்பதாக அவர் இதற்குமுன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“அந்த செய்தியில் கொஞ்சமும் உண்மையில்லை. நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என இதுவரை எந்த மீடியாவில் சொன்னதில்லை. அது எவ்வளவாக இருந்தாலும் உங்களுக்கு என்ன? நானும், தயாரிப்பாளருக்கும் மட்டுமே அதை பற்றி யோசிக்க வேண்டும்,” என முகநூல் பதிவில் கூறியுள்ளார் பார்வதி.
மேலும் ஊடகத்துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என கேட்டுள்ளார் அவர்.
Average Rating