பெண்களே உங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? கவனமா இருங்க..!!
பொதுவாகவே புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு தான் அதிகமாக நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் என நாம் அனைவரும் நினைத்து கொண்டு உள்ளோம். ஆனால் பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
பெண்களுக்கு பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோயானது வெளிப்புறத்தில் தான் உண்டாகிறது. ஆரம்பத்திலேயே இதனை கண்டறிவது மிக கடினமாகும்.
வெளிப்புறத்தில் புற்றுநோய் உருவாவதால் மற்ற உறுப்புகளுக்கு மிக எளிதாக பரவிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பெண்கள் உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள் தான் இதற்கான அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் கட்டாயம் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.
உடல் சோர்வு
பொதுவாக அதிகப்படியான வேலை மற்றும் அலைச்சலினால் தான் உடல் சோர்வு ஏற்படும். ஆனால் காரணமே இல்லாமல் தீடீரென உடல் சோர்வு ஏற்பட்டால் கட்டாயம் அலட்சியப்படுத்தாமல் சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.
முதுகு மற்றும் தோள்பட்டை வலி
நுரையீரலின் மேல்பகுதியில் கட்டிகள் இருந்தால் அது கட்டாயம் நரம்புகளை பாதிக்கும். இதனால் முதுகு மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது.
மூச்சு திணறல்
உடற்பயிற்சியின் போது மூச்சு திணறல் ஏற்பட்டால் நம் சுவாச சுழற்சியில் ஏதோ தடைப்பட்டு இருப்பதாக அர்த்தம். இதனை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது.
தொடர்ச்சியான இருமல்
நுரையீரலின் மேல் கட்டி இருந்தால் சுவாசத்தில் தடை ஏற்பட்டு தொடர்ச்சியாக தும்மல் ஏற்படும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
நெஞ்சு வலி
நுரையீரல் புற்றுநோய் கட்டிகள் மார்புப் பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களை அழுத்துவதால் நெஞ்சு வலி ஏற்படும்.
கரகரப்பான குரல்
நுரையீரலின் மேல் புற்றுநோய் கட்டி ஏற்பட்டால் குரல் கரகரப்பாக மாறிவிடும். இதனால் மூச்சுவிடும் போது கூட அதிகமான சத்தம் ஏற்படும். இது நுரையீரல் புற்றுநோயின் மற்றொரு அறிகுறியாகும்.
சளி மற்றும் இரத்தத்துடன் கூடிய இருமல்
நுரையீரலின் கட்டி அடைப்பை ஏற்படுத்துவதால் சளி அதிகமாக தேங்கும். இது புற்றுநோய் கட்டிகளில் இரத்த கசிவை ஏற்படுத்துவதால் எச்சில் வழியாக இரத்தம் வெளியேறும்.
Average Rating