சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வாகன விபத்தில் தீ பிடித்து எரிந்த இளைஞரை காப்பாற்றாமல் செல்போனில் போட்டோ எடுத்த மக்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் இன்று மோதிக்கொண்டதில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது தீப்பற்றி கொண்டதில் அவர் வலியால் துடித்தார்.
அந்த சாலை வழியே சென்ற மக்கள் குறித்த நபரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தார்கள்.
பின்னர் விபரம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், படுகாயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து ஏற்பட்டு இளைஞர் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நினைவிழந்ததால் உதவிக்கு யாரையும் அழைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.
Average Rating