பெண் கொலை: கள்ளத்தொடர்பை கைவிடாததால் வெட்டிக் கொன்றேன்- கணவர் வாக்குமூலம்..!!

Read Time:4 Minute, 5 Second

201705171659041066_police._L_styvpfஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பக ராமன்புதூரை அடுத்த ஆதிச்சன்புதூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). ஆரல்வாய்மொழியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நளினா சாம்லெட் (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நளினா சாம்லெட்டுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த விஜயகுமார், மனைவி நளினா சாம்லெட்டை கண்டித்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நளினா சாம்லெட் தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வந்தார்.

இதனால் விஜயகுமாருக்கும், நளினா சாம்லெட்டுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்கள் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார், அரிவாளை எடுத்து நளினா சாம்லெட்டை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நளினா சாம்லெட் துடிதுடித்து இறந்தார்.

இதுபற்றி அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நளினா சாம்லெட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விஜயகுமாரை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தேடினர். அப்போது அவர் அங்குள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரவோடு இரவாக சுற்றி வளைத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.

கைதான விஜயகுமார் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மனைவி நளினா சாம்லெட்டுக்கும், எங்கள் வீட்டு அருகே வசிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. எனது மனைவி, அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். நான் இல்லாத நேரங்களில் அந்த வாலிபர் எங்கள் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அவர்களது கள்ளத்தொடர்பு பற்றி எனது உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் எனக்கு தெரிவித்தனர். 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் எனது மனைவி தடம் மாறி செல்வதை அறிந்து நான் வேதனை அடைந்தேன். இதுபற்றி எனது மனைவியிடம் கேட்டு அவரை கண்டித்தேன். இனிமேல் அந்த வாலிபருடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினேன்.

ஆனால் எனது மனைவி நான் சொன்னதை கேட்கவே வில்லை. அவள் இஷ்டம்போல் அந்த வாலிபருடன் பழகி வந்தாள். இதனால் தினமும் மனைவியை கண்டித்து அவளுடன் தகராறு செய்தேன். நேற்று இரவு தகராறு ஏற்பட்டபோது ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வெட்டினேன். இதில் அவள் இறந்து விட்டாள்.

இவ்வாறு விஜயகுமார் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

கைதான விஜயகுமார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையாள படத்தில் பார்வையற்ற நடன மங்கையாக தன்ஷிகா..!!
Next post விஷ்ணுவிஷால்-கேத்தரின் பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்..!!