பாலாஜி, நித்யா விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வந்த போலீசார்..!!
Read Time:1 Minute, 11 Second
காமெடி நடிகர் தாடி பாலாஜி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இவரது மனைவி நித்யா தன்னுடைய கணவர் சாதி பெயர் சொல்லி தன்னை கொடுமைப்படுத்துவதாக போலீஸில் புகார் அளித்திருந்தார்.
அதன்படி போலீசார் இருவருடனும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதில் நித்யா, பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்க, பாலாஜி தன் மனைவி மீது எந்த குறையும் கூறவில்லை.
இரண்டு பேரிடமும் பேசியதற்கு பிறகு போலீசார் கூறுகையில், நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதோடு, போதிய புரிந்துணர்வு இல்லை.
இதனால், இருவருக்கும் கவுன்சலிங் கொடுக்க பரிந்துரைசெய்துள்ளோம் என்று போலீஸ் விசாரணைக்கு பின் கூறியுள்ளனர்.
Average Rating