மீண்டும் வர மாட்டீர்களா? உரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ..!!
அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றதில், நாய் மனம் வருந்திய நிலையில் முக பாவனைகளை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் விலங்குகள் காப்பகத்தில் பல காலமாக வளர்த்து வந்த Electra (4) என்னும் பெண் நாயை அதை வளர்த்தவர்கள் நிரந்தரமாக அங்கு விட்டு சென்று விட்டார்கள்.
இனி தன்னை வளர்த்தவர்கள் மீண்டும் வர மாட்டார்கள் என்பதை உணர்ந்த Electra சோகம் மற்றும் வருத்தம் தேய்ந்த முகத்துடன் செய்வதறியாது அழுது திணறியுள்ளது.
இந்த மனதை உருக்கும் காட்சியை Lolys Menchaka என்னும் பெண் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
Lolys அந்த வீடியோ பதிவில் கூறுகையில், Electraவின் முகம் சோகம் மற்றும் தனிமையை உணர்வதாக பிரதிபலிக்கிறது
சில நேரங்களில் இப்படி மிருகங்களை ஏன் அதன் உரிமையாளர்கள் திரும்ப ஒப்படைக்கிறார்கள் என புரிந்து கொள்ள நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரை 270,000 பேர் பார்த்துள்ளனர்.
இணைய பயன்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், நாய்கள் தன்னலமற்ற ஜீவனாகும். Electraவின் சோகம் நிறைந்த கண்கள் என்னை கொல்கிறது என கூறியுள்ளார்.
இந்நிலையில், Electraவை புதிய உரிமையாளர்கள் தங்கள் இல்லத்துக்கு தற்போது அழைத்து சென்று விட்டனர் என விலங்குகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
Average Rating