ப்ளீஸ் அழ வேண்டாம்..! கடிதம் எழுதி விட்டு காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்..!!
நெலமங்களாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஜோதி. இருவரும் பல வருடம் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அக்கம் பக்கத்தினரே பொறாமைபடும் அளவுக்கு குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இக்காதல் தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறாள். இந்த நிலையில் ஜோதிக்கு 20 வயதான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனை தொடர்ந்து ஜோதி தனது கள்ளக்காதலனுடன் ஜோதி எஸ்கேப் ஆகி விட்டாள். உடன் மகளையும் அழைத்து சென்று விட்டாள். முன்னதாக காதல் கணவனுக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றிருக்கிறாள்.
அதில், யாரின் சாபமோ என்னவோ தெரியவில்லை. நம் இருவருக்கும் ஒத்து வரவில்லை. என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். ப்ளீஸ் அழ வேண்டாம். உங்கள் அம்மாவுடன் சென்று விடுங்கள். உங்களுக்கு அவ்வப்போது போன் செய்வேன். உங்கள் மகளை பார்க்க அடிக்கடி வாருங்கள்.
என் மகளை என்னிடம் இருந்து பிரித்து விடுவீர்களோ என்ற பயம் எனக்கு. உங்களை விரும்பிய அளவுக்கு வேறு யாரையும் நான் விரும்பியதில்லை. ஆனால் நான் என்ன செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளார்.
தற்போது சீனிவாஸ் அந்த கடிதத்தையும், அவளது புகைப்படத்தையும் வைத்து கொண்டு காதல் பரத் போல பித்து பிடித்து தேடி அலைந்து வருகிறாராம்.
Average Rating