சொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்..!!
அந்த தாய்க்கு வயது 27 இருக்கும். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியை சேர்ந்தவர். போலீஸ் இவரை கைது செய்யும் போது, அவர் தனது சொந்த மகளை கிரில் முறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.
மாலை திடீரென அந்த பகுதியில் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட இடத்தை நெருங்கும் போது, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் இருந்து மிகுதியான புகையுடன் அந்த அலறல் சத்தம் கேட்டு, பதட்டத்தில் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீஸிற்கு கால் செய்தனர்.
கிரில் முறையில்…
போலீஸ் அந்த வீட்டை விரைந்த போது, அந்த பெண் தனது சொந்த மகளை கிரில் முறையில், வீட்டின் கீழே இருந்த கேரேஜ் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தார். சிறுமி முற்றிலும் கருகிய நிலையில் காணப்பட்டார்.நிபுணர்கள் அந்த சிறுமி எதனால் கொல்லப்பட்டார். எரித்து கொல்லப்பட்டாரா? அல்லது இறந்து பிறகு எரிக்கபட்டாரா? என பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இருவரும்…
போலீஸ் வீட்டை விரைந்தவுடன் அந்த பெண்மணி, “நாங்கள் இருவருமே எரிந்து சாக வேண்டியவர்கள். இப்படி இறந்தால் தான் நாங்கள் ஒன்றாக சொர்க்கம் செல்ல முடியும்” என கூறியுள்ளார்.
விவாகரத்து!
ஆனால், அக்கம்பக்கத்து வீட்டார்கள், சமீப காலமாகவே அந்த பெண்மணி மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து பெற்றது முதலே இவர் இப்படி தான் இருக்கிறார் என போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
மருத்துவமனையில்…
அந்த பெண்மணியின் உடல் மற்றும் மனநிலை சரியாக இல்லாத காரணத்தால், உடனே விசாரணையை துவங்காமல், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்கள் போலீசார்.அவர் தான் கொலைக்கு முற்றிலும் காரணம் என அறிந்தவுடன் கைது செய்துள்ளனர்.
மனநலம்!
மனோதத்துவ நிபுணர்கள், இந்த வகையில் அந்த பெண்மணி சிறுமியை கொன்றதற்கு மனநிலை தான் காரணம். அவர் மனதளவில் மிகையாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். ஆயினும், அந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது
Average Rating