நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வெளியீடு தள்ளி வைப்பு: லைகா நிறுவனம் அறிவிப்பு..!!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போனது. இதையடுத்து, 2018, ஜனவரி மாதம் 2.0 திரைக்கு வரும் என்று லைகா நிறுவன அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2.0 படம் 2018, ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 2.0 படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2018, ஏப்ரல் மாதம் 2.0 படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating