ஆண்டிற்கு ஒருமுறை தங்க நிறத்தில் மாறும் நந்தி… இந்த அதிசயத்திற்கு என்ன காரணம் தெரியுமா?..!!
பொதுவாகவே சில கோவில்களில் அதிசய நிகழ்வுகள் நடைபெறும். இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்.
தற்போது கோவில் ஒன்றில் இருக்கும் நந்தி சிலை தங்க நிறமாக ஆண்டிற்கு ஒருமுறை மாறிகின்றதாம். இந்த கோவிலைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாமே!..
அக்கோவிலின் பெயர் ரிஷபேஸ்வரர் கோவில் ஆகும். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் அமைந்துள்ளது. சுமார் 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் மாதந்தோறும் வரும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் இங்குள்ள நந்தீஸ்வரருக்கு விஷேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்தக் கோவிலின் இந்த ரகசியத்தினை கடந்த 2012ம் ஆண்டிலே அறியப்பட்டது. ஆம் 2012ம் ஆண்டில் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ பூஜை நடைபெற்ற நேரத்தில், திடீரென நந்தியின் சில இடங்கள் தங்க நிறத்தில் மின்ன ஆரம்பித்துள்ளது.
ஏன் இந்த மாற்றம் என்று குழம்பிக் கொண்டிருந்தனர் மக்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு தெரிந்தது இதற்குக் காரணம் வழக்கத்திற்கு மாறாக சூரிய ஒளியானது கோவிலின் ராஜகோபுரத்தினை கடந்து நந்தி சிலையின் மீது விழுந்துள்ளதே ஆகும். இதனால் தான் நந்தி தங்க நிறத்தில் காட்சியளித்துள்ளது
Average Rating