உ.பி.: பள்ளி கழிவறையில் 7 வயது சிறுமி மானபங்கம்..!!
Read Time:1 Minute, 7 Second
உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7 வயது சிறுமி 2-வது வகுப்பு படிக்கிறாள். அவளை அதே பள்ளியில் படிக்கும் 5-வது வகுப்பு மாணவன் ஒருவன் மானபங்கம் செய்ததாக ஷாகியாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதில், கழிவறையில் வைத்து தனது மகளை மாணவன் மானபங்கம் செய்ததாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த 1-ந் தேதி நடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு துவாரகா பள்ளியில் 4 வயது சிறுமி உடன் படிக்கும் மாணவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating