5 தலைமுறையினருடன் பிறந்தநாள் கொண்டாடிய 103 வயது பாட்டி..!! (வீடியோ)
Read Time:1 Minute, 9 Second
103 வயதான பாட்டி தன் 5 தலைமுறையினருடன் தன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமாத்தாள். இவருக்க்கு இன்றுடன் 103 வயதை எட்டியுள்ளார். ராமாத்தாளின் பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள், எள்ளு பேரபிள்ளைகள் என அனைவரும் கூடி பிறந்த நாளை அப்பகுதியினருக்கு விருந்தளித்து விழாக்கோலம் போல் கொண்டாடியுள்ளனர்.
விழாவிற்க்கு வந்த 250 பேரில் 5 தலைமுறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு பாட்டியிடம் வாழ்த்துப் பெற்றனர். அவர்கள் அனைவரையும் பார்த்து பேசி மகிழ்ச்சியடைந்துள்ளார் ராமாத்தாள் பாட்டி.8 ஆண்டுகளுக்கு முன்பு தான் அவரது கணவர் ராமசாமி இறந்துள்ளார்.
Average Rating