விருது வாங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராயை எச்சரித்த அமிதாப்பச்சன்..!! (வீடியோ)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் இணைந்து விருது வாங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
பின்பு, இருவரும், தாங்கள் வாங்கிய விருதுடன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சனை ஓடிவந்து கட்டிபிடித்துக் கொண்டு YOU ARE THE BEST எனக் கூறுகிறார்.
இதற்கு, அமிதாப்பச்சன், தன் மகள் ஆரத்யா போன்று நடந்துகொள்வதை நிறுத்திக்கொள் என ஐஸ்வர்யா ராயிடம் கூறுகிறார். அதன்பின்னர் பத்திரிகையாளர்கள், உங்கள் வீட்டில் 4 பெரிய ஸ்டார்கள் இருக்கிறார்கள், இதனை ஆரத்யா எவ்வாறு எடுத்துக்கொள்வார் என கேள்வி எழுப்ப, இதற்கு அமிதாப்பச்சன், நீங்கள் தவறாக சொல்கிறீர்கள், எனது வீட்டில் தந்தையும் ஒரு ஸ்டார் தான்.
அவர் சிறப்பாக கவிதை எழுதுவார்.அவருடன் சேர்ந்தது 5 ஸ்டார் எங்கள் வீட்டில் இருக்கிறோம் என்றும் விருது வாங்கியதில் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.
கடந்த வருடம் எடுக்கப்பட்ட இந்த வீடியொவானது தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Average Rating