காருக்கு பதிலாக ஆம்புலன்ஸை ஓட்டி வந்த கணவன்! அதிர்ச்சியில் மனைவி? நடந்தது என்ன?..!!
தமிழகத்தில் போதையில் ஆடி காருக்கு பதிலாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் நிக்கல்சன். இவர் அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக ஆடி காரில் சென்றுள்ளார். அப்போது இவர் மது குடித்து சென்றுள்ளார்.
அங்கு உறவினரை பார்த்துவிட்டு மது போதையில் திரும்பிய இவர், வெளியே வந்து தனது ஆடி காருக்கு பதிலாக அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
காரில் சென்ற கணவன் ஆம்புலன்சில் வருவதைப் பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதற்கிடையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்சை யாரோ திருடிவிட்டதாக கூறி, அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதை அறிந்த நிக்கல்சன் உடனடியாக ஆம்புலன்சை எடுத்து வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் பின் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
Average Rating