சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..!!

Read Time:6 Minute, 54 Second

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. சுய இன்பத்தால் கேடுகள் நிறைய என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அப்படி இல்லையாம். அதனால் பல நன்மைகளும் இருக்கிறதாம்… சற்று வித்தியாசமான, அதே சமயம் பலரது முகத்தை சுளிக்க வைக்கக்கூடியவாறான தலைப்பாக இருந்தாலும், பலர் இன்றும் இந்த சுயஇன்பத்திற்கு அடிமையாகி உள்ளனர். அது அவர்களுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதனால் ஏற்படும் நன்மைகளும் சற்று உள்ளன. அது குறித்து பார்வைதான் இந்தக் கட்டுரை…

‘சுயஇன்பம்’ என்பது ஆணோ, பெண்ணோ தங்களுடைய பிறப்புறுப்பை அவர்களாகவே தூண்டிவிட்டு, அதில் இன்புற்று சந்தோஷம் அனுபவிப்பதாகும். பெரும்பாலும் இந்த பழக்கத்திற்கு இளம் வயதினர் பலர் அடிமையாக இருக்கின்றனர். பொதுவாக சுயஇன்பம் காண்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம் மற்றும் தவறானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இப்படி சுயஇன்பம் கொள்வது ஒருவரை ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆச்சரியமாக உள்ளதா? ஆம், சுயஇன்பத்தினால் பலருக்கு தெரியாத நன்மைகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஆய்வு ஒன்றிலும், சுயஇன்பம் கொள்வதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று சொல்கிறது. மேலும் ஆண்கள் இப்படி சுயஇன்பம் காண்பது, அவர்களது விந்தணுவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான ஒரு பாதுகாப்பான வழிமுறை என்றும் பாலியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். ஆண்களும் சரி, பெண்களும் சரி சுய இன்பத்தை தொடாத ஆள் யாருமே இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மையாம்.

சரி வாருங்கள், இப்போது சுயஇன்பத்தால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்…

தலைவலி

தலைவலியை போக்க சுயஇன்பம் உதவியாக இருக்கும். எப்படியென்று கேட்கிறீர்களா? எப்படியெனில் சுயஇன்பம் அனுபவிக்கும் போது, தலையில் ஆக்சிடோசின் என்னும் கெமிக்கல் வெளியேற்றப்படுவதால், அது தலைவலியைக் குறைத்து, நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி

விந்துதள்ளலின் போது கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன் வெளியேற்றப்படுகிறது. இந்த ஹார்மோன் உடலில் இருந்தால் தான் உடல் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். எனவே சுயஇன்பம் மேற்கொள்வதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, உடலில் நோய்களின் தாக்கம் குறைந்து, உடல் வலிமையாக இருக்கும்.

புற்றுநோய்

சிறுநீர்பிறப்புறுப்பு பாதையில் உள்ள டாக்ஸின்களால் தான் புரோஸ்டேட் புற்றுநோயானது ஆண்களுக்கு ஏற்படுகிறது. எனவே ஆண்கள் சுயஇன்பம் அனுபவிக்கும் போது, விந்தணுவானது வெளியேற்றப்படும் போது, சிறுநீர்பிறப்புறுப்பு பாதையில் தங்கியுள்ள டாக்ஸின்களும் வெளியேற்றப்பட்டு, புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

தூக்கம்

இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமானால், சுயஇன்பம் செய்வதன் மூலம் கிடைக்கும். ஏனெனில் இதனால் உடலில் உள்ள அழுத்தமானது குறைக்கப்பட்டு, எண்டோர்பின் என்னும் கெமிக்கல் உற்பத்தியாகி, மன அழுத்தத்தை குறைத்து, நல்ல சந்தோஷமான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் டென்சன்

பெண்கள் சுயஇன்பத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் டென்சன் மற்றும் வலி குறைக்கப்பட்டு, மாதவிடாய் சுழற்சியும் ஆரோக்கியமாக நடைபெறும்.

சிறுநீரக பாதையில் தொற்று

சுயஇன்பத்தை அனுபவிப்பதன் மூலம், சிறுநீரக பாதையில் ஏற்படும் அனைத்து வகையான தொற்றுக்களையும் வெளியேற்றிவிடலாம். இதனால் எந்த ஒரு தொற்றுக்களும் சிறுநீரக பாதையில் ஏற்படாமல் இருக்கும்.

தாம்பத்ய வாழ்க்கை

திருமணத்திற்கு பின் தாம்பத்ய வாழ்க்கையானது நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சுயஇன்பம் அதற்கு உதவியாக இருக்கும். எப்படியெனில், திருமணத்திற்கு முன் சுயஇன்பம் கொள்வதால், திருமணத்திற்கு பின் துணையுடன் உறவு கொள்ளும் போது, நீண்ட நேரம் துணையை சந்தோஷப்படுத்தும் ஆற்றல் கிடைக்கும். இதனால் தாம்பத்ய வாழ்க்கை சூப்பராக இருக்கும்.

மனச்சோர்வு மற்றும் மன இறுக்கம்

சுயஇன்பத்தை அனுபவிப்பதன் மூலம், மன இறுக்கம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் செரோடோனின் மற்றும் டோபமைன் உடலில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம்.

குறிப்பு

சுய இன்பம் சந்தோஷத்தையும், மனதுக்கு சற்று ரிலாக்சேஷனையும் கொடுத்தாலும் கூட அடிக்கடி அதைச் செய்வதைத் தவிர்க்கலாம்.. ஏனென்றால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே! எனவே அளவோ இன்பத்தை அனுபவித்து, சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காருக்கு பதிலாக ஆம்புலன்ஸை ஓட்டி வந்த கணவன்! அதிர்ச்சியில் மனைவி? நடந்தது என்ன?..!!
Next post பிரசவ தழும்புகள் மறையனுமா? இதெல்லாம் செய்து பாருங்கள்…!!