முகப்பரு, கருவளையத்தை போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்..!!

Read Time:2 Minute, 21 Second

அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படும் தக்காளியை வைத்து ஈஸியாக ஃபேஸ் பேக் செய்யலாம். முகத்தை பொலிவாக்க, நம்மிடம் இருக்கும், அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படும் தக்காளியை வைத்து ஈஸியாக ஃபேஸ் பேக் செய்யலாம். இப்போது அந்த தக்காளியை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்வதென்று பார்ப்போம்!!!

1. தக்காளியை வேக வைத்து தோலை நீக்கி, அதனுடன் சிறிது ஓட்ஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு அதனைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சூரிய ஒளி பட்டுப் பட்டு பழுப்பு நிறமாகிய இடம் பொலிவு பெற்று அழகுடன் காணப்படும்.

2. வேக வைத்த தக்காளியோடு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு முகத்தில் தடவி, காய்ந்ததும் அதனை தண்ணீரால் கழுவி வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.

3. மூல்தாணி மெட்டியுடன் தக்காளிச் சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வேண்டும், இல்லையென்றால் உள்ளங்கையை நினைத்து மாஸ்க் மீது மசாஜ் போல் செய்ய வேண்டும். இப்படி 2-3 நிமிடம் மசாஜ் செய்து பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், முகப்பரு, கருவளையம் போன்றவை போய்விடும்.

4. எங்கேனும் அவசரமாக செல்ல வேண்டும் என்றால் அப்போது வேக வைத்த தக்காளியுடன் 2 ஸ்பூன் பாலை விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிச் சென்றால், முகமானது பிரகாசமாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் ஆண் குறி உங்கள் மனைவிக்கு போதவில்லையா ?..!!
Next post கவர்ச்சியால் 8 வாலிபர்களை காதலில் வீழ்த்திய இளம்பெண் உட்பட 4 பேர் கைது…!!