கவர்ச்சியால் 8 வாலிபர்களை காதலில் வீழ்த்திய இளம்பெண் உட்பட 4 பேர் கைது…!!

Read Time:7 Minute, 54 Second

திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மயக்கி கோடிக் கணக்கில் மோசடி செய்த கோவையை சேர்ந்த சுருதி(வயது 21) என்ற இளம் பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இவரது மோசடிக்கு தாய் சித்ரா(47), இவரது 2-வது கணவர் பிரசன்னா வெங்கடேஷ்(37), தம்பி சுபாஷ்(19) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். சுருதி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

சுருதி ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்த சுருதி தனது தாயுடன் சேர்ந்து பணக்கார வாலிபர்களை வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.

நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டிய சுருதி கைதியாக மாறியதன் பின்னணி மற்றும் அவரது மோசடி லீலைகள் குறித்து போலீசார் கூறியதாவது:-

சுருதியின் சொந்த ஊர் கடலூர். இவரது தந்தை வியாபாரம் செய்து வந்தார். புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்த இவர் ஆங்கில பேச்சில் அசத்துவார். திடீரென இவரது தந்தை விபத்தில் இறந்து விட்டார். அதன்பிறகு இவர்களது வாழ்க்கை தலை கீழாக மாறியது.

(கைதான சுருதியின் தாய் சித்ரா, தம்பி சுபாஷ், பிரசன்னாரெட்டி)
இதுவரை வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கை தடைபட்டதும் சுருதியின் தாயார் சித்ரா திருமண தகவல் மையம் நடத்த தொடங்கினார். அப்போது தான் திருமண புரோக்கரான பிரசன்னாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் இணைய தளத்தில் திருமண வரன் தேடி விண்ணப்பிக்கும் பணக்கார வாலிபர்கள், என்ஜினீயர்கள் குறித்து சித்ராவுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் மோசடி செய்தால் போலீசில் புகார் கொடுக்க மாட்டார்கள், நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என கூறி அதற்கான திட்டத்தையும் வகுத்து கொடுத்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சுருதி, இந்த திட்டத்துக்கு சம்மதித்து தனது புகைப்படங்களை பணக்கார வாலிபர்களுக்கு அனுப்பி உள்ளார்.

சினிமா நடிகை போல தோற்றமளிக்கும் சுருதியின் அழகில் மயங்கி வாலிபர்கள் தொடர்பு கொண்டதும் அவர்களுடன் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் சுருதி நட்பை வளர்ப்பார். அப்போது தனது கவர்ச்சி படங்களை அவர்களுக்கு அனுப்பி மயக்குவார்.

திருமணம் செய்தால் சுருதியை தான் திருமணம் செய்வேன் என்ற முடிவுக்கு வாலிபர்கள் வரும் போது, தனது தாய்க்கு மூளையில் கட்டி உள்ளது, ஆபரேசனுக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி லட்சக்கணக்கில் பணம் கறப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதற்காக உண்மையிலேயே தனது தாய் சித்ராவுக்கு மூளையில் கட்டி இருப்பது போன்று மருத்துவ ஆவணங்களையும் தயார் செய்து வைத்துள்ளார். வெளிநாட்டு டாக்டர்களிடம் தனது தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என கூறி, தனது வலையில் வீழ்ந்தவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை கறந்துள்ளார்.

அந்த பணத்தில் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சென்று அங்கு ஆடம்பர ஓட்டல்களில் தங்கியும், சுற்றுலா சென்றும் சொகுசாக வாழ்ந்துள்ளனர். இவர்களிடம் ஏமாந்த பால முருகன் ஜெர்மனியில் என்ஜினீயராக வேலை பார்த்தார். அவர் சுருதியின் தாய் சித்ராவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக குடும்பத்துடன் லண்டனுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தார். அதன்படி கடந்த ஆண்டு சுருதி தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்று வந்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் இருந்தே இவர்கள் மோசடியில் இறங்கி உள்ளனர். சென்னை புதுவண்ணை பகுதியை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் 2011-ம் ஆண்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகை மயிலாடுதுறையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது புகாரின்பேரில் 2014-ல் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

2016-ல் நாமக்கல் பரமத்தி வேலூரை சேர்ந்த சந்தோஷ்குமாரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்ததாக கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் வழக்கு, நாமக்கலை சேர்ந்த சசிகுமாரிடம் ரூ.22 லட்சம், நாகையை சேர்ந்த சுந்தரிடம் ரூ.15 லட்சம், சிதம்பரத்தை சேர்ந்த அருள்குமரகுரு ராஜா என்பவரிடம் 20 பவுன் நகைகள், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்கமலிடம் ரூ.21 லட்சம் என இதுவரை 8 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது.

ஒவ்வொருவரிடம் பணம் கறந்ததும் அங்கிருந்து இடத்தை மாற்றி அடுத்த இடத்துக்கு சென்று விடுவார்கள். மேலும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பெயரில் பழகி வந்துள்ளார். தற்போது சேலம் மாவட்டம் சித்தூர் அருகே உள்ள எடப்பள்ளியை சேர்ந்த பாலமுருகன் என்ற என்ஜினீயரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர்.

சுருதியும், அவரது தாயும் இவர்களை போல மேலும் பல பணக்கார வாலிபர்களை மோசடி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த மோசடிக்கு மேலும் பலர் உடந்தையாக இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். இதற்காக சுருதியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அனுமதி பெறுவதற்கு தேவையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகப்பரு, கருவளையத்தை போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்..!!
Next post உங்களுக்கு இதயம் இருக்கா? தமிழ்ராக்கர்ஸ் டீமிடம் வேண்டுகோள் வைத்த விக்னேஷ் சிவன்..!!