ஐக்கிய தேசிய கட்சி மீது புலிமுத்திரை குத்தி அனைத்துப் பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட அரசு முயற்சி -திஸ்ஸ அத்தநாயக்கா விசனம்

Read Time:1 Minute, 30 Second

ஐக்கிய தேசிய கட்சி மீது விடுதலைப்புலிகள் முத்திரை குத்தி சகல பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா விசனம் தெரிவித்துள்ளார் யுத்தத்தை இவ்வாறு முன்னெடுப்பதில் பயன் கிட்டுமாயின் இந்தியா அரசியல் தீர்வுக்குறித்து அழுத்தங்களை கொடுக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் ஒரு முழுப்பொய் எனவும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் இந்த யுத்தம் தேவையற்ற தொன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையானின் துப்பாக்கிப் பலத்தை பயன்படுத்திக் கிழக்கு தேர்தல்களை அரசாங்கம் வெற்றி கொண்டதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார் தம்பதெனியத் தேர்தல் தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முக்கிய படையணித் தலைவர்களை தொடர்ந்து இழந்து வரும் புலிகள் இயக்கம்!
Next post இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது