மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’: காரணமும் – தீர்வும்..!!

Read Time:8 Minute, 25 Second

மார்கழி என்றாலே நடுங்க வைக்கும் குளிர் நீடிக்கும். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.

இந்த பருவ காலத்தில் பல்வேறு பிரச்சினைகளும், நோய் பாதிப்புகளும் காணப்படுவது இயல்பானதாகும். இப்பாதிப்புகளுள் ஒன்றாக இருப்பது இளஞ்சிவப்பு கண் நோய் அல்லது கண் இமைப்படல அழற்சி அல்லது உள்ளூர் மக்கள் மத்தியில் பொதுவாக ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுவதும் ஒன்று. தற்போது சென்னையை இந்த ‘மெட்ராஸ் ஐ’ மிரட்டிக்கொண்டு இருக்கிறது.

கண் இமைப்படல அழற்சி என்பது, கண்ணின் வெண்படலத்தில் ஏற்படும் வீக்கமாகும். (வெண்படலம் என்பது கண்ணின் வெண்மைப்பகுதி மீதும் மற்றும் கண் இமையின் உட்புறத்திலும் அமைந்திருக்கிற மிக மெல்லிய தெளிவான திசுவாகும்). எளிதாக பிறருக்கு பரவக்கூடிய இந்த கண் தொற்றானது, குழந்தைகளை எளிதில் தாக்குகிறது. பள்ளியில், விளையாட்டு மைதானங்களில், டியூசன் மையங்களில் மற்றும் அவர்கள் அடிக்கடி சென்று வருகிற பிற இடங்களில் இந்த நோய் தொற்று அவர்களை எளிதில் பாதிக்கிறது.

கண் இமைப்படல அழற்சியானது அதன் பல்வேறு வடிவங்களில், ஒவ்வாமை, தொற்றுகிற மற்றும் வேதிப்பொருள் கண் இமைப்படல அழற்சி என மூன்று வகைகளாக வகை பிரிக்கப்படுகிறது. ஒவ்வாமை கண் இமைப்படல அழற்சியானது, பருவ காலத்தில் ஏற்படுகிற ஒவ்வாமைகள் (தூசி, புகை மற்றும் பிற) பாதிப்புள்ள மக்களை பாதிக்கிறது. தொற்றக் கூடிய கண் இமைப்படல அழற்சியானது, நுண்ணுயிரி அல்லது நச்சுயிரி தொற்றுகளினால் விளைகிறது.

வேதிப்பொருள் கண் இமைப்படல அழற்சியானது ஷாம்புகள், அழுக்கு, புகை மற்றும் நீச்சல் குளத்திலுள்ள குளோரின் போன்ற எரிச்சலூட்டிகளின் காரணமாக ஏற்படுகிறது. வேதிப்பொருள் மற்றும் ஒவ்வாமை கண் இமைப் படல அழற்சி நோய்களே கோடை காலத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றன. இந்நோய் பல அறிகுறிகளின் மூலம் வெளிப்படுகிறது. இதில் கண்ணின் வெண்மைப்பகுதி அல்லது கண் இமையின் உட்புறம் சிவப்பாக மாறுகிறது.

அதிகமான கண்ணீர், கண் இமைகள் மீது படலப்பூச்சாக மாறுகிற அடர்த்தியான, மஞ்சள் நிறத்திலான வெள்ளைக்கழிவு ஆகியவை வெளிப்படும். குறிப்பாக உறக்கத்துக்கு பிறகு ஏற்படக்கூடும். விழித்திருக்கும்போது கண்ணிலிருந்து பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் திரவம் சுரக்கும். தொற்றுப்பாதிப்புள்ள நபருக்கு கண்களில் அரிப்பு உணர்வும், எரிச்சல் உணர்வும் ஏற்படலாம். மங்களான பார்வையும் அல்லது வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும் உணர்வும் அவர்களுக்கு இருக்கக்கூடும். இந்த நோயானது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை நீடிக்கக் கூடும் மற்றும் அதன் பிறகு தானாகவே பாதிப்பு சரியாகிவிடும்.

கண் சிவத்தலே, ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பில் மிக குறிப்பிடத்தக்க அறிகுறியாகும். கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது கண்ணில் இருந்து அளவுக்கு அதிகமாக நீர் கோர்த்தல், அரிப்பு, வலி மற்றும் கண்ணை திறக்க முடியாமல் வெள்ளைக்கழிவு அடைத்துக்கொள்வது ஆகியவை ஒவ்வாமை மற்றும் நச்சுயிரினால் ஏற்படும் கண் இமைப்படல அழற்சிகளின் பொதுவான அறிகுறிகளாகும்.

ஒவ்வாமை மற்றும் நச்சுயிரினால் ஏற்படும் கண் இமைப்படல அழற்சியில் பாதிக்கப்பட்ட கண்கள் நீர்போன்ற திரவத்தை வெளியேற்றுகின்றன. மேலும், நுண்ணுயிரினால் ஏற்படும் கண் இமைப் படல அழற்சியில் அடர்த்தியான, மஞ்சளும், பச்சை நிறத்திலுமான திரவம் வெளியேறுகிறது. இந்த திரவ வெளியேற்றமானது, உலர்ந்த பிறகு கண் இமைகள் மூடிக்கொள்ளுமாறு மாறிவிடுகின்றன.

வெளிச்சத்தைப் பார்க்கும்போது, மிதமான உணர்திறன் பாதிப்பையும் நோயாளிகள் அனுபவிக்கின்றனர். வெளிச்சத்திற்கு அளவுக்கு அதிகமான உணர்திறன் அல்லது கூச்சம் ஏற்படுமானால், தொற்றானது கருவிழிப்படலத்தை பாதித்திருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக ஒரு கண் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். அவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கண் அல்லது கண்களை குளிர்ந்த நீரைக்கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு அடிக்கடி உங்கள் கைகளை சுத்தம் செய்வது நல்லது. தனிப்பட்ட டவல், கைக்குட்டை, தலையணை உறை, படுக்கை விரிப்பு மற்றும் சோப்பை பயன்படுத்த வேண்டும். கான்டக்ட் லென்ஸ்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். மாறாக, குளிர் கண்ணாடிகளை (சன்கிளாஸ்) அணியலாம்.

பாதிப்பு இருக்கும்போது, உங்களது கண்களை தொடவோ அல்லது தேய்க்கவோ கூடாது. கண் மருத்துவர் ஒருவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு கண் சொட்டு மருந்து, ஆயின்மெண்ட் போன்ற மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. கண் மேக்-அப் சாதனங்கள், கான்டக்ட் லென்ஸ்கள் ஆகியவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிற தனிநபர்களின் ஆடைகளோடு சேர்த்து உங்களது ஆடைகளை துவைக்கக்கூடாது.

பொதுவாக நம்பப்படுவதைப்போல, தொற்று பாதிப்புள்ள நபரோடு நேருக்கு நேர் கண்ணை பார்ப்பதன் காரணமாக நோய் தொற்று ஒருவருக்கு ஏற்படுவதில்லை. தொற்று பாதிப்புள்ள நபரை தொட நேர்ந்தால், அதன்பிறகுசோப்பு மற்றும் நீரைக்கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளை குறைப்பதற்காக படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை வெந்நீர் மற்றும் சோப்பை பயன்படுத்தி துவைக்க வேண்டும்.

‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நபர்கள், சிகிச்சையை தொடங்கி அதன் மூலம் அறிகுறிகளின் பாதிப்பில் முன்னேற்றம் ஏற்படத்தொடங்கும் வரை பிறருடன் தொடர்புகொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். நோய் தொற்றானது பிறருக்கு பரவுகின்ற வாய்ப்பை இது குறைக்க உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ஜுலி- வெளியான தகவல்..!!
Next post சாதி என்றால் என்னப்பா? மகளின் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த தந்தை! வீடியோ..!!