இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக கறுப்பு பூனைபடை வருகிறது
Read Time:1 Minute, 27 Second
சார்க் மாயநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை வரும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் பாதுகாப்புக்கென கறுப்புபூனை படை வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கடந்தவாரம் கொழும்பு வந்து திரும்பிய இந்திய உயர் மட்டக்குழு இதுகுறித்த பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறதென வெளிநாடு ஒன்றுக்கான இந்தியப்பிரதமரின் விஜயத்தின் போது கறுப்புபூனையின் படையும் கூட செல்வதே வழக்கம் எனினும் இலங்கைக்கான விஜயத்தின் போது இந்திய பிரதமரின் பாதுகாப்பை கறுப்புபூனை படையே முழுமையாக ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதனால் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை கலங்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் குறிப்பாக இந்திய பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் போது இந்தியாவிலிருந்து வர வைக்கப்படும் உலங்கு வானூர்திகளும் மோட்டார் வாகனங்களுமே பயன்படுத்தப்படும் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating