பொலிஸார் அதிரடி நடவடிக்கை; நேற்று இரவு நாடு முழுவதும் 1670 பேர் கைது!!

Read Time:1 Minute, 47 Second

நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 03.00 மணி வரை நாடளாவிய முழுவதும் 1308 இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1670 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 719 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 397 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

அத்துடன் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த 05 பேரும் வேறு பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 554 பேரும் கைது செய்யப்பட்டவர்களுள் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 3715 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷேட சுற்றிவளைப்பின் போது 11 கிலோவும் 193 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 13.943 கிராம் ஹெரோய்ன் மற்றும் 3860 லீட்டர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது 42,673 பேர் மற்றும் 20,913 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சடலமாக கண்டெடுக்கப்பட்ட 22 வயதான பெண்!!
Next post முன்மாதிரி பெண் டிஎஸ்பி ‘வழிதவறியதால்’தற்கொலைக்கு முடிவு செய்த ஆந்திர வாலிபர்!!