தைவானில் 2 முறை நிலநடுக்கம்!!
Read Time:58 Second
தைவானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். துறைமுக நகரமான ஹுவாலியனில் இருந்து 15 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
இந்த பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் 6.1 புள்ளி அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தைபே உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் ்அச்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.
Average Rating