போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பாக். தீவிரவாதியை மீட்டு சென்ற கும்பல்!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் போலீஸ் காவலில் இருந்த தீவிரவாதியை மீட்பதற்காக, தீவிரவாத கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர். ஸ்ரீநகரின் காகா சராய் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸ் காவலுடன் வந்த தீவிரவாதியை மீட்க அங்கு வந்த தீவிரவாத கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த 2014ல் தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் ஜூட் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையில், அவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீநகரின் காகா சராய் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று காவலரால் அழைத்து செல்லப்பட்டான். நவீத் மருத்துவமனைக்கு வருவதை அறிந்த தீவிரவாத கும்பல் அவனை மீட்பதற்காக மருத்துவமனைக்கு வெளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
Average Rating