கடவுளே ஏன் இந்த விளையாட்டு? சோகத்தில் சமந்தா!!
Read Time:1 Minute, 22 Second
நடிகர் நாக சைதன்யாவை மணந்து கொண்டு இல்லறத்தில் செட்டிலான சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் தங்கியிருந்தாலும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படங்களில் நடிப்பதால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறார். சென்ற சில ஒரு மாதமாக ஓய்வில்லாமல் அவர் நடித்து வருகிறார். இது அவருக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓய்வு எடுக்க முடியாமல் பிஸியாக நடித்து வரும் சமந்தா இணைய தள பக்கத்தில் தனது சோர்வை வெளிப்படுத்தி உள்ளார். ‘ராஜமுந்திரியில் பகலில் கடும் வெயிலில் நடித்துவிட்டு இரவு ஷூட்டிங்கிற்காக தென்காசி சென்று அங்கு மழையில் நனையும் காட்சியில் நடித்தேன். கடவுளே இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டை என்னிடம் விளையாடுவது ஏன்’ என்று சோகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
Average Rating