நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு!!

Read Time:1 Minute, 53 Second

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. பாட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தமிழக அரசு மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் குழு சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தனை சந்தித்து மனு ஒன்றை அளித்தது. அப்போது பட்டாசு தொழிற்சாலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அதிமுக எம்.பி.க்களிடம் தெரிவித்தார்.

பட்டாசு தொழிலை நம்பி இருப்பவர்களுக்கு சாதகமாக சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டாசு உற்பத்திக்கு தடை கோரும் வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையாகும். மேலும் மாசு ஏற்படுத்தும் பட்டியலில் இருந்து பட்டாசை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் 25 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 20.!!
Next post சிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம் : வான்வழித் தாக்குதலில் 59 பேர் உயிரிழப்பு !!