யாழில் சிக்கிய கொள்ளைக் கும்பல்!!

Read Time:2 Minute, 4 Second

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி, நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பில் குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

யாழ் நாவற்குளி பகுதியைச்சேர்ந்த இருபது தொடக்கம் இருபத்து மூன்று வயதுகளையுடைய குறித்த மூவரும் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பதினைந்து பவுண் உருமாற்றப்பட்ட பவுண் கட்டிகள் இரண்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த கொள்ளைக்கும்பலின் திருட்டு நகைகளைப் பெற்று அதை உரு மாற்றும் வேலை செய்து வந்த கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘வடகொரியா மீதான தடைகள் மீறப்பட்டன’
Next post ஆன்டிபயாட்டிக்கை அனாவசியமா பயன்படுத்தாதீங்க!