இங்கிலாந்தில் 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கை விட்டனர்
Read Time:49 Second
இங்கிலாந்து நாட்டில் பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கைவிட்டனர். இந்த தடை நடைமுறைக்கு வந்த 9 மாதங்களில் 5.5 சதவீதம் பேர் புகைபிடிப்பதை கைவிட்டனர். அதன் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும். லட்சக்கணக்கானவர்கள் புகைபிடிப்பதை கைவிட்டதால், அதன் விளைவாக 40 ஆயிரம் பேர் மரணத்தில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Average Rating