18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ஷெரீப்புக்கு ரூ.5.8 கோடி சொத்து!!

Read Time:1 Minute, 49 Second

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.5.8 கோடிக்கு சொத்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான ஊழலை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்தது தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கடந்த செப்டம்பர் 8ம் தேதி 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ெஷரீப்பின் சொத்து மதிப்பு ரூ.5.8 கோடி இருந்ததாக இவ்வழக்குகளை விசாரித்து வரும் பொறுப்புடமை நீதிமன்றத்தில் ஊழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 2000-2001ம் ஆண்டு செலுத்தப்பட்ட வருமான வரியின் அடிப்படையில் ஷெரீப்புக்கு அந்த காலக்கட்டத்தில் ரூ.5 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 870 மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ‘எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ என்ற பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்!
Next post பூரான் கடிக்கு மருந்தாகுமா மஞ்சள் தூள்!!