அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடும் பலரின் மெய்யான நோக்கம் வெளிநாடு செல்வதே! -ரஞ்சித் குணசேகர
Read Time:1 Minute, 4 Second
அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வெளிநாடுகளுக்கு குடியேறுவதற்கே அநேகர் முயற்சிப்பதாகத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் காணப்பட்டால் அவற்றை பொலிஸாருக்கு தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாது ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating