மரத்தில் தொங்கியவாறு ஆணின் உடற்பாகங்கள் மீட்பு!!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபத்தலாவ வனப்பகுதியில் மரத்தில் தொங்கியவாறு ஆணின் உடற்பாகங்களை பொலிஸார் (20) மீட்டுள்ளனர்.
போபத்தலாவ வலகம்பா பகுதியை சேர்ந்த 80 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆர்.ரம்பன்டா என்பவரின் உடற்பாகங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காணமல் போனதாக உறவினரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலே மேற்படி உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
போபத்தலா பண்ணையில் பணிபுரிபவர்களினால் மரத்தில் தலைப்பகுதியொன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்தே பொலிஸார் உடற்பாகங்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடற்பாகங்களை நுவரெலிய மாவட்ட நீதிபதி பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating