துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுவன் பலி இந்திய தூதருக்கு பாக். சம்மன்!!
Read Time:1 Minute, 24 Second
துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுவன் கொல்லப்பட்டது பற்றி கண்டனம் தெரிவிப்பதற்காக, பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்கிற்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் குரிரட்டா பகுதியில் இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 8 வயது சிறுவன் அயன் ஷாகித் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகஅந்நாட்டு ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் இந்த கூற்று ஆதாரமற்றது என இந்தியா மறுத்துவிட்டது. இதனிடையே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
Average Rating