புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!
Read Time:55 Second
றத்கம புகையிரத நிலையத்திற்கும் தொடந்துவ ரயில் நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (22) இரவு 11.05 மணியளவில் மருதானையில் இருந்தி காலி நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண பரிசோதனைகள் இன்று இடம்பெற உள்ளதுடன் றத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating