காதல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி?

Read Time:2 Minute, 1 Second

ஐதராபாத்தில் தொழில்நுட்ப காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று பிரபல இந்தி நடிகையான தீபிகாபடுகோனே கலந்து கொண்டார்.

அவரை காண ரசிகர்கள் திரண்டனர். தீபிகா படுகோனேயை பார்த்ததும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தளர்ச்சி ஏற்படும். அது போன்ற கடினமான சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு காதல் தோல்வியால் விரக்தி அடைந்தேன். வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்றே நினைத்தேன்.

அதில் இருந்து மீண்டு வருவதற்கு எனது அம்மாதான் காரணம். அவர்தான் எனக்கு இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து ஆறுதலும், ஊக்கமும் அளித்து நம்பிக்கை ஊட்டினார்.

நான் மீண்டும் சகஜ நிலைக்கு வருவதற்கு அவர்தான் காரணம். மேலும் டாக்டர்களின் அறிவுரைகளும் உதவிகரமாக இருந்தது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஏதாவது பிரச்சினையில் இருக்கிறார்களா? என்பதை கவனித்து அதை சரி செய்ய வேண்டும்.

பிள்ளைகள் தங்களது பிரச்சினைகளை பெற்றோரிடம் சுதந்திரமாக கூறும் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீபிகா படுகோனே தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியாவில் கல்லூரி மாணவிகளை கடத்திய போகோ தீவிரவாதிகள்- தாக்குதல் நடத்தி அதிரடியாக மீட்ட ராணுவம்!!
Next post எச்1பி விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா!!