நானுஓயா காட்டு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!!
நானுஓயா, ஈஸ்டல் தோட்டப்பகுதியில் காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று (01) காலை 11மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மூதாட்டி நேற்று (28) காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்று காணாமல் போயுள்ள நிலையில் மூதாட்டியின் உறிவினர்கள் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை செய்திருந்தனர்.
இதனை அடுத்து பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து, மூதாட்டியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போதே மூதாட்டி சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, பிரேத பரிசோனையின் பின் மூதாட்டியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating