வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

Read Time:1 Minute, 52 Second

வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெரியண்ணன் கிட்ணசாமி என்னும் 67 வயது நிரம்பிய வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இவர் வழமையாக தனது வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் காணப்படும் அவரது வீட்டுத்தோட்டத்தில் பயிர்களை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக இரவு வேளைகளில் மின்சாரத்தை பாய்ச்சி பின்னர் விடிந்தவுடன் அதனை நிறுத்தியும் வந்துள்ளார்.

இவர் இன்று (01) காலை 6.30 மணியளவில் மின்சார துண்டிப்பை ஏற்படுத்தாமல் வீட்டுத்தோட்டத்திற்கு சென்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் பிரதேசவாசிகளால் இவர் மின்சாரம் தாக்கி வீட்டுத் தோட்டத்தில் இறந்து கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவித்த தலவாக்கலை பொலிஸார், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நானுஓயா காட்டு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!!
Next post கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!