கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!
Read Time:1 Minute, 2 Second
காலி, மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) இரவு 8.15 மணியளவில் களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு பின்னர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் காலி, மகுளுவ பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சந்தேக நபரை கைது செய்ய காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating