துப்பாக்கியால் சுட்டு வெள்ளை மாளிகை அருகே வாலிபர் தற்கொலை!!
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே கொடூரமாக சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்க அதிபரின் இல்லம் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகின்றது. தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் புளோரிடா சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகை வடக்கு பகுதியில் உள்ளே வேலி அருகே 100க்கும் மேற்பட்டோர் கூட்டமாக நின்றிருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சில முறை சுட்டுள்ளார்.
பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் காரணமாக அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அங்கிருந்து சடலத்தை அகற்றினார்கள். தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில் வேறு யாரும் காயமடையவில்லை. பாதுகாப்பு மிகுந்த வெள்ளை மாளிகை அருகே ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
Average Rating