ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள்: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல்!!

Read Time:1 Minute, 25 Second

ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
ராணுவத்தில் மருத்துவ சேவை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். எல்லை பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக தற்போது வீராங்கனைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். 3 வீராங்கனைகள் சமீபத்தில் போர் விமானிகளாகி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பணி வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ராணுவம் சார்பில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் காலங்களில் ராணுவத்தில் அதிகளவில் பெண்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பல்வேறு சோதனைகளை கடந்து இந்திய பெண்கள் சாதனை படைத்து வருவதாக அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் உள்ள கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறப்பு: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!
Next post இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!