கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய புரட்சியாளர் சேகுவாரா டைரி வெளியீடு
கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவாராவின் நாட்குறிப்பு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை முன்வைத்த புரட்சியாளராக கருதப்படுகிறார். காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபா புரட்சியில் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் புரட்சி நாயகனாக சேகுவாரா விளங்கி வருகிறார். சேகுவாரா பொலிவிய காடுகளில் பதுங்கியிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த முயற்சி செய்தார். அப்போது அவர் தமது எண்ணங்களை நாட்குறிப்பில் எழுதி வைத்தார். இவை பொலிவிய நாட்குறிப்புகள் எனும் பெயரில் வெளியாகி உள்ளன. எனினும் தற்போது இதன் மூல பிரதியை பொலிவிய அரசு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. விரைவில் சேகுவாராவின் கையெழுத்தில் இந்த புத்தகம் வெளியிடப்படும் என்றும் பொலிவிய அரசு அறிவித்துள்ளது.
Average Rating