2 கோடி பெறுமதி மாணிக்க கற்களுடன் சீன பிரஜை கைது !!
Read Time:1 Minute, 4 Second
2 கோடிக்கு அதிகான பெறுமதியுடைய மாணிக்க கற்களுடன் இலங்கைக்கு வந்த சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சீன பிரஜை இன்று (26) அதிகாலை சங்ஹாய் நகரில் இருந்து வருகை தந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 12 மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.
2 கோடியே 11 இலட்சத்து 31 ஆயிரத்து 227 ரூபா பெறுமதியுடைய மாணிக்க கற்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுங்க திணைக்களம் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating