தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!!

Read Time:1 Minute, 30 Second

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தின் கெம்ரோவோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது அங்கு குழுமியிருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர்.

தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவத்தில் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 12 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததாகவும் இந்த தீ விபத்தால் அருகிலுள்ள கட்டிடங்களிக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 கோடி பெறுமதி மாணிக்க கற்களுடன் சீன பிரஜை கைது !!
Next post மாலபே பகுதியில் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகம்!!